×

காரைக்குடி அருகே மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா

காரைக்குடி, ஏப்.10: காரைக்குடி அருகே அமராவதிபுதூர் சாரதா நிகேதன் மகளிர் கலைக்கல்லூரி 20ம் பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி நிறுவனர் சுவாமி ஆத்மானந்த மகாராஜ் ஆசீர்வதித்தார். கல்லூரி முனைவர் முதல்வர் சிவசங்கரி ரம்யா வரவேற்றார். கல்லூரி செயலாளர் யதீஸ்வரி சரதேஸ்வரிபிரியா அம்பா, சேதுபாஸ்கரா விவசாய கல்லூரி சேர்மன் டாக்டர் சேதுகுமணன் முன்னிலை வகித்தனர். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், இன்று செல்போன் முலம் உலகம் உள்ளங் கையில் சுருங்கி விட்டது. அறிவுலகத்தின் பயணம் ஒரு முற்றுப்பெறாத பயணம்.

காலம் முழுவதும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். உண்மையான மனிதத்தை கல்வி உருவாக்கி தர வேண்டும். பெற்றோர்களுக்கு மரியாதை தர வேண்டும். உறவுகள், நண்பர்கள் என அனைத்தும் நம்மை விட்டு விலகி போகட்டும். ஆனால் நம்மை விட்டு என்றும் விலகாத உறவு புத்தகங்கள் மட்டுமே. எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் கற்ற கல்வி மனிதகுலத்தை உயர்த்தி பிடிப்பதற்கே என உணர்ந்து கொள்ள வேண்டும். நாட்டிற்கும், சமூகத்திற்கும் எப்போதும் தொண்டாற்ற வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் யதீஸ்வரி ராகிருஷ்ணபிரியாஅம்பா, கல்லூரி இயக்குநர் மீனாலோச்சனி, அறங்காவலர் பாஸ்கரன், சிங்காரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post காரைக்குடி அருகே மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.

Tags : Women's College Graduation Festival ,Karaikudi ,Amaravathipudur ,Saratha ,Niketan Women's Art College ,Dinakaran ,
× RELATED காரைக்குடியில் கிணற்றுக்குள் விழுந்த மாற்றுத்திறனாளி இளைஞர்..!!